Posts

Showing posts from August, 2020

கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

Image
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.  பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும்.  அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது அழுத்தமாக இல்ல

கிருஷ்ண ஜெயந்தி

Image
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு.  உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவுக்கு அருகில் உள்ள மதுரா நகரத்தில் தேவகி - வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். மதுரா நகரில் பிறந்து கோகுலத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாக கிருஷ்ணர் எனப்படும் கண்ணன் வளர்ந்தார்.  கிருஷ்ணர்  பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை.  தற்போது அந்த சிறைச்சாலைக்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே இன்றும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடமாக  வழிபடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்தது. அன்று விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் நாம் தெரிந்தும், தெரியாமலும்  செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில