இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள். இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம்...
Comments
Post a Comment
subscribe Media 1 Television