இதயத்தை பாதுகாக்கும் பொடி


வேர்க்கடலை பூண்டுப்பொடி
தேவையானவை:
வேர்க்கடலை - 1 கப்
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • வெறும் கடாயில் வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பூண்டு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறிய பின் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்து 15 நாள்கள் வரை பயன்படுத்திகொள்ளவும்.
பயன்கள்:
  • இருதயத்தை பாதுகாப்பதோடு இதய நோய் வராமலும் இரத்த ஒட்டத்தையும் சீராக்கவும் செய்கிறது.
  • உடல் எடையை குறைய விரும்புவர்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
  • பித்தப்பை கல் உருவாவதை தடுக்கிறது
  • ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • முளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
  • உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • பெண்களுக்கு மார்பக் கட்டி வராமல் தடுத்து ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது
  • பெண்களுக்கு எலும்புத் துளை நோய் வராமல் பாதுகாக்கிறது

For More Interesting things Click the links

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்