நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் அருமையான உணவு

சிகப்பு அரிசி ராகி புட்டு

தேவையான பொருட்கள்:
சிகப்பு அரிசு மாவு - 1/2 கப்
ராகி (அ) - 1/2 கப் கேப்பை
துருவிய தேங்காய் - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 1/4 கப் அல்லது 1/2 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 டம்ளர்

செய்முறை:

  • முதலில் சிகப்பு அரிசி மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்
  • வெறும் கடாயில் சிகப்பு அரிசி மற்றும் ராகி மாவு கலவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் இந்த மாவு கலவை ஆறியதும் அதில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
  • மாவை பிசைந்த பின் கொழுக்கட்டை பிடித்தால் பிடிக்க வர வேண்டும், உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதுதான் மாவின் பதமாகும்.
  • இப்பொழுது சூடான இட்லி பாத்திரத்தில் புட்டு மாவை  வேக வைக்கவும். சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களில் புட்டு வெந்து விடும்.
  • அதன் பின்னர் புட்டில் துருவிய தேங்காய் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
  • சுவையான சத்து நிறைந்த வாசனையான சிகப்பு அரிசி ராகி புட்டு தயார்.
பயன்கள்:
சிகப்பு அரிசி

  • சிவப்பு அரிசியில்  வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதால் இருதய ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது
  • டைப் 2 சர்க்கரை நோயைக் குறைக்கும். 
  • வாய்ப்புண்ணை குணமாக்குகிறது.
  • நம் உடலிருக்கும் லோ டென்சிட்டி லிப்போபுரோட்டின் என்கிற கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • உயர் ரத்த அழுத்த்தைக்குறைக்க உதவுகிறது
  • மாரப்படைப்பு வராமல் தடுக்கிறது
  • பக்கவாதம் வாராமல் தடுக்கிறது
  • பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காக்கிறது
  • மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது
  • ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துகிறது.
  • மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும்

ராகி:

  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
  • மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவுகிறது
  • இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்ய உதவும் இரும்புச் சத்து அதிகளவிலிருப்பதால் ரத்த சோகையை வராமல் தடுக்கிறது.
  • கால்சியம், வைட்டமின் டி அதிகளவில் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
  • இரத்ததில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு ரத்த அழுத்த்ததையும்  சீராக வைக்க உதவுகிறது.
  • லெசிதின் மற்றும் மெத்தியோனைன் அதிகளவிலிருப்பதால் கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
  • ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வதால் பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கச் செய்கிறது.
  • செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட செய்கிறது.
இவற்றின் பயன்கள் எண்ணற்றவையாகும். எனவே கட்டாயம் உணவில் சிகப்பு அரிசி மற்றும் ராகியை சேர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கும் மனத்திற்கும் நன்மையைச் செய்யுங்கள்.


For More Interesting things Click the links

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்