தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பயத்தம்பருப்பு - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
தாளிக்க
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
செய்முறை
கடாயில் பாசி பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியதும் கழுவிய பச்சரிசி சேர்க்கவும். அதன் பின்னர் வறுத்து கழுவிய பாசி பருப்பை சேர்த்து நன்கு குழைய வேக விடவும். இப்பொழுது சுவையான சத்துநிறைந்த பாசிப்பயறு கிச்சடி தயார். குழந்தைகளுக்கு ஏற்றது.
ஹோம்மேட் பீட்சா தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் செய்வதற்கு மைதா மாவு - 1 கப் தயிர் - 1/2 கப் பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் செய்வதற்கு நல்ல சிகப்பு தக்காளி - 6 வெங்காயம் - 1 காஸ்மீரி மிளகாய் - 4 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு - 10 சிறியது டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஓரிகேனோ -1/2 டீஸ்பூன் பேசில் -1/2 டீஸ்பூன் காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப பெரிய வெங்காயம் சிறியது - 1 ஸ்வீட் கார்ன் - 1 குடை மிளகாய் - பாதி மொஸரெல்லா சீஸ் - துருவியது செய்முறை சாஸ் செய்வதற்கு முதலில் தக்காளியை நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கடாய...
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும் முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது கசகசாவை மிக்சியில் அரைத்துக் கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரைப் போட்டுச் சாப்பிட வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும். இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊர வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும் கடைந்தெடுத்த மோரில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சேர்வையடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது சிலருக்கு...
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும். அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது ...
Comments
Post a Comment
subscribe Media 1 Television