தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பயத்தம்பருப்பு - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
தாளிக்க
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
செய்முறை
கடாயில் பாசி பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியதும் கழுவிய பச்சரிசி சேர்க்கவும். அதன் பின்னர் வறுத்து கழுவிய பாசி பருப்பை சேர்த்து நன்கு குழைய வேக விடவும். இப்பொழுது சுவையான சத்துநிறைந்த பாசிப்பயறு கிச்சடி தயார். குழந்தைகளுக்கு ஏற்றது.
ஹோம்மேட் பீட்சா தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் செய்வதற்கு மைதா மாவு - 1 கப் தயிர் - 1/2 கப் பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் செய்வதற்கு நல்ல சிகப்பு தக்காளி - 6 வெங்காயம் - 1 காஸ்மீரி மிளகாய் - 4 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு - 10 சிறியது டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஓரிகேனோ -1/2 டீஸ்பூன் பேசில் -1/2 டீஸ்பூன் காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப பெரிய வெங்காயம் சிறியது - 1 ஸ்வீட் கார்ன் - 1 குடை மிளகாய் - பாதி மொஸரெல்லா சீஸ் - துருவியது செய்முறை சாஸ் செய்வதற்கு முதலில் தக்காளியை நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கடாய...
தேவையான பொருட்கள்: பன்னீர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் காஷ்மிரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 2 உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை: பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டிய பன்னீரை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின்னர் பொரித்த பன்னீரை சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பன்னீர்...
தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி - 2 கப் பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை முதலில் கழுவி வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சிறிது வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான அதே சமயம் சத்தான பச்சை பட்டாணி சீரக சாதம் தயார். For More Interesting things Click the links Blogg: https://leelatamilkitchen.blogspot.com/ Facebook: https://www.facebook.com/23LeelaKitchen Youtube: http://www.youtube.com/c/LeesKitchen
Comments
Post a Comment
subscribe Media 1 Television