தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பயத்தம்பருப்பு - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
தாளிக்க
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
செய்முறை
கடாயில் பாசி பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியதும் கழுவிய பச்சரிசி சேர்க்கவும். அதன் பின்னர் வறுத்து கழுவிய பாசி பருப்பை சேர்த்து நன்கு குழைய வேக விடவும். இப்பொழுது சுவையான சத்துநிறைந்த பாசிப்பயறு கிச்சடி தயார். குழந்தைகளுக்கு ஏற்றது.
ஹோம்மேட் பீட்சா தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் செய்வதற்கு மைதா மாவு - 1 கப் தயிர் - 1/2 கப் பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் செய்வதற்கு நல்ல சிகப்பு தக்காளி - 6 வெங்காயம் - 1 காஸ்மீரி மிளகாய் - 4 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு - 10 சிறியது டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஓரிகேனோ -1/2 டீஸ்பூன் பேசில் -1/2 டீஸ்பூன் காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப பெரிய வெங்காயம் சிறியது - 1 ஸ்வீட் கார்ன் - 1 குடை மிளகாய் - பாதி மொஸரெல்லா சீஸ் - துருவியது செய்முறை சாஸ் செய்வதற்கு முதலில் தக்காளியை நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கடாய...
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும். அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது ...
இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள். இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம்...
Comments
Post a Comment
subscribe Media 1 Television