பசியின்மைக்கு அருமையான மருந்து




இஞ்சி அல்வா:
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி சாறு - 1/2 கப்
  2. பேரீச்சம் பழம் - 500கிராம் (கொட்டை நீக்கியது)
  3. வெல்லம் - 1 கப் (பொடித்தது)
  4. ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
  5. முந்திரிப்பருப்பு - 25 கிராம்

செய்முறை:
  • இஞ்சி சாறில் பேரீச்சம் பழம் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்
  • ஊறிய பின் அதனை மிக்ஸி அல்லது உரலில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்  கொள்ளவும்
  • அரைத்த விழுதுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  • பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு இவைகளை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
  • ஒரு தட்டில் நெய் சேர்த்து இஞ்சி அல்வா பரப்பி விடவும்.
  • பின் தேவையான வடிவத்தில் தூண்டு போட்டு சாப்பிடவும்.
  • நெய் சேர்க்க விரும்புவோர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்
  • காலையில் சாப்பிடுவது மிகவும் ஏற்றது.

பயன்கள்:
  • பசியின்மையைப் போக்கி நாவிற்கு நல்ல ருசியை தருகிறது
  • உடலுக்கு வலிமையை தருகிறது.
  • வாத கோளாறுகள் வாராமால் தடுக்கிறது
  • இரத்தக்குழாய்களில் கொழுப்புகளால் ஏற்படும் அடைப்பை நீக்கிவிடும்
  • நார்சத்து இவற்றில் அதகளவில் உள்ளது

**** For More Interesting things Click the links ****


Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்