Posts

பஞ்சாபி ஸ்பேஷல் - கீமா மட்டர்

Image
 பஞ்சாபி ஸ்பேஷல்: கீமா மட்டர் தேவையான பொருட்கள்: மட்டன் கொத்துக்கறி - 500கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 1 வேகவைத்த பட்டாணி - 1 கப் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 1/4 கப்(நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன் (நறுக்கியது) இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது) செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும் பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளவும் அதன்பிறகு சுத்தம்செய்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு கிளறவும் தணலை சிம்மில் வைத்து வேக வைத்த பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறிவிட்டு உப்பைப்போட்டு நீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும் மட்டன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் மூடியிருக்கும் தட்டை நீக்கி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு கரம்மசாலாத்தூளைச் சேர்த்து, நறுக்கிய க

கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

Image
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.  பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும்.  அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது அழுத்தமாக இல்ல

கிருஷ்ண ஜெயந்தி

Image
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு.  உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவுக்கு அருகில் உள்ள மதுரா நகரத்தில் தேவகி - வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். மதுரா நகரில் பிறந்து கோகுலத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாக கிருஷ்ணர் எனப்படும் கண்ணன் வளர்ந்தார்.  கிருஷ்ணர்  பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை.  தற்போது அந்த சிறைச்சாலைக்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே இன்றும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடமாக  வழிபடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்தது. அன்று விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் நாம் தெரிந்தும், தெரியாமலும்  செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில

கொய்யாப் பழ ஜூஸ்

Image
தேவையான பொருட்கள்: கொய்யாப்பழம் - 1 மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி இந்துப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை: கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி துருவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கையால் பிசையுங்கள் அல்லது மத்தால் கடையுங்கள் அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகம் சேர்த்துச் சாப்பிடுங்கள் இனிப்பு தேவையெனில் இந்துப்பை தவிர்த்து வெல்லத்தூள் தேவைக்கு சேர்த்து பருகலாம் பயன்கள்: வைட்டமின் சி சத்துள்ளது, மலச்சிக்கலை அகற்றுகிறது. சாப்பாட்டிற்குப் பின் சாப்பிட ஏற்ற உணவாகிறது. வைட்டமின் சி  சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. மேலும் நோய் தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

Image
ஹோம்மேட் பீட்சா தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் செய்வதற்கு மைதா மாவு - 1 கப் தயிர் - 1/2 கப் பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன் எண்ணெய்  - 1 1/2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் செய்வதற்கு நல்ல சிகப்பு தக்காளி - 6 வெங்காயம் - 1 காஸ்மீரி  மிளகாய் - 4 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு - 10 சிறியது டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப  சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2  டீஸ்பூன் ஓரிகேனோ -1/2 டீஸ்பூன் பேசில் -1/2 டீஸ்பூன் காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப பெரிய வெங்காயம் சிறியது - 1 ஸ்வீட் கார்ன் - 1 குடை மிளகாய் - பாதி மொஸரெல்லா சீஸ் - துருவியது செய்முறை சாஸ் செய்வதற்கு  முதலில் தக்காளியை  நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு இடித்த வெள்ள

பசியின்மைக்கு அருமையான மருந்து

Image
இஞ்சி அல்வா: தேவையான பொருட்கள்: இஞ்சி சாறு - 1/2 கப் பேரீச்சம் பழம் - 500கிராம் (கொட்டை நீக்கியது) வெல்லம் - 1 கப் (பொடித்தது) ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 25 கிராம் செய்முறை: இஞ்சி சாறில் பேரீச்சம் பழம் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும் ஊறிய பின் அதனை மிக்ஸி அல்லது உரலில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்  கொள்ளவும் அரைத்த விழுதுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு இவைகளை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். ஒரு தட்டில் நெய் சேர்த்து இஞ்சி அல்வா பரப்பி விடவும். பின் தேவையான வடிவத்தில் தூண்டு போட்டு சாப்பிடவும். நெய் சேர்க்க விரும்புவோர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம் காலையில் சாப்பிடுவது மிகவும் ஏற்றது. பயன்கள்: பசியின்மையைப் போக்கி நாவிற்கு நல்ல ருசியை தருகிறது உடலுக்கு வலிமையை தருகிறது. வாத கோளாறுகள் வாராமால் தடுக்கிறது இரத்தக்குழாய்களில் கொழுப்புகளால் ஏற்படும் அடைப்பை நீக்கிவிடும் நார்சத்து இவற்றில் அதகளவில் உள்ளது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.

ஹீமோகுளோபின் அதிகரிக்க இதை சாப்பிடுங்க

Image
பீட்ரூட் ஜாம் தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 1/4 கிலோ பேரீச்சம் பழம் - 1/4 கிலோ (கொட்டை நீக்கியது) தேன் - 25 கிராம் செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும் பேரீச்சம் பழத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் பீட்ரூட் மற்றும் பேரீச்சம் பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அரைத்த விழுதில் தேன் சேர்த்து நன்கு கிளறவும். இனிப்பு வேண்டுமென்றால் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும் பயன்கள் : இரத்த சோகையிலிருந்து விடுபட சுவைமிகுந்த அருமையான மருந்து நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது நார் சத்து அதிகளவில் உள்ளது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen