Posts

உடலின் அடிப்படை தத்துவங்கள்: கபம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. கபம்: உடலுக்கு வலிமை, மூட்டுகளுக்கு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்கு குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீருக்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களைப் புரிகிறது கபம் தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பாரமாக இருத்தல், உடல் எண்ணெய்ப் பசையாக இருத்தல், உணர்விழப்பு, நாவில் அதிக இனிப்பு, சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகமின்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், இருமல், மேல் மூச்சு, அதிக தூக்கம், தலைச்சுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகு...

உடலின் அடிப்படை தத்துவங்கள்: பித்தம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. பித்தம்: உடலுக்கு வெப்பத்தைத் தருதல், உணவைச் செரித்தல், தோலுக்கு நிறத்தையும் பளபளப்பையும், பார்வை தருதல் போன்ற செயல்களபை் புரிகிறது. பித்தம் தன்னிலையிலிருந்து மாறி  நோய் நிலையை அடைந்தால் மலம், சிறுநீர், தோல் போன்றவை மஞ்சள் நிறமடைதல், அதிக பசி அல்லது பசியின்மை, உடல் கண் எரிச்சல், அதிக வியர்வை, தோல் சிவத்தல், நாவறட்சி, தாகம், புண்கள், கட்டிகள் தோன்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பித்த தேகிகளின் உடலமைப்பு: நீள்வட்ட தாடைகள் நன்றாக வளைந்து, தெளிவாகத் தெரியும்படியான தெளிவான முக அமைப்பு இருக்கும் செம்பு போன்ற மஞ்சள் நிறம் இருக்கும் தெளிவான நிலையான...

உடலின் அடிப்படை தத்துவங்கள்: வாதம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. வாதம்: இது உடலுக்கு ஊக்கம் உண்டாக்கல், மூச்சு விடல், மூச்சு வாங்கல், மனம், மொழி, மெய்களுக்கு செயல் தருதல், சிந்தனை செய்தல், உடல் தாதுக்களுக்கு அணிச்சைச் செயல் தருதல், தொழில் செய்யும் முனபை்பைத் தருதல், மலம், சிறுநீர், விந்து, நாதம், இவற்றை வெளியேற்றுதல், கண்களுக்கு ஒளி தருதல், கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்ற ஐம்பொறிகளுக்கு வன்மை தருதல் போன்ற செயல்களைப் புரிகிறது. வாதம் தன்னிலையிலிருந்து மாறி நோய் நிலையை அடைந்தால், உடலில் வலி, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், தசைவலி, தசை மெலிவு, மூட்டுவலி, மூட்டு நழுவல், தோல் வறட்சி, மலச்சிக்கல், நீர் சுருக்கு, வய...

உடல் என்னும் இயந்திரம்

Image
இயற்கைக்கு மீறிய எச்செயலும் நோயை உண்டு பண்ணும் என்பது தெளிவு. இயற்கையோடு இயைந்ததே இந்த உடல். இதை தான் சித்தர்கள் அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்  என்று குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறு இந்த உலகமானது அண்டம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம், மண் என்னும் ஐம்பூதங்களால் ஆனது இந்த பூவுலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் இந்தப் பூவுடலிலும் ஏற்படுகின்றன. இதனால்தான் வேனிற்காலத்தில் அம்மை, மஞ்சள் காமாலை, கட்டிகள் போன்ற வெப்பம் காரணமான நோய்களும், குளிர்காலத்தில் இரைப்பு, இளைப்பு, பீனிசம் போன்ற குளிர்ச்சி சம்பந்தமான நோய்களும் உடலில் தோன்றுகின்றன. அதுமட்டுமல்லாமலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உண்டாகும் கதிர்வீச்சு மாற்றம் உடலிலும், மனதிலும் பல பேருக்கு பாதிப்பை உண்டாக்குவதை கண்கூடாகக் காணலாம். இயற்கை அளித்த இந்த உடம்புதான் எத்தகைய அற்புதமானது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் இயற்கையை படைத்த இறைவனால் எப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் அறிவியல் பூர்வமாக ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளனவே. அதுதான் மெய்ஞானத்த...

இளமையோடு இருக்கச் செய்யும் சூப்

Image
பேபிகார்ன் சூப்: தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 200 கிராம் தக்காளி - 4 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் சோளமாவு - 4 டேபிள்ஸ்பூன் பால் - 300 மில்லி தண்ணீர் - 750 மில்லி மிளகுத் தூள் - சிறிதளவு சீரகத்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: நன்கு சுத்தம் செய்த பேபிகார்ன், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் காய்கறிகளை வேகும் வரை வதக்கி மசித்து வடிகட்டவும் பால் மற்றும்  சோளமாவு சேர்த்து வெள்ளைச்சாஸ் செய்யவும் இத்துடன் வடிகட்டிய காய்கறி கூழ் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும் குறிப்பு: பேபிகார்ன்க்கு பதில் காளான் / தக்காளி / பட்டாணி / கீரை / பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த பல வகையான சூப் தயாரிக்கலாம். பயன்கள்: சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. முதுமையினால் ஏற்படும் எலும்பு முறிந்து போவதை தவிர்க்கின்றன பேபிகார்னில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது இரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது சருமங்களை இளமையோடு இருக்க...

இஞ்சியும் மெலனேஷியன் தீவும்

Image
இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள். இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம்...

வாழைப்பழ பணியாரம் | Banana Paniyaram | Leela Tamil Kitchen

Image
Banana Paniyaram தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் - 1 சர்க்கரை -3 மேசைக்கரண்டி கோதுமை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/2 கப் சமையல் சோடா  - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை செய்முறை: முதலில் வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதில் கோதுமைமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பவுலில் அரைத்தவற்றை மிக்ஸியிலிருந்து எடுத்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு குழி பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி அளவிற்கு மாவை ஊற்றி  இருபுறமும் வேக விடவும். சூடான சுவையான வாழைப்பழ பனியாரம் ரெடி. **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen