Posts

Showing posts from April, 2020

உடலின் அடிப்படை தத்துவங்கள்: கபம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. கபம்: உடலுக்கு வலிமை, மூட்டுகளுக்கு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்கு குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீருக்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களைப் புரிகிறது கபம் தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பாரமாக இருத்தல், உடல் எண்ணெய்ப் பசையாக இருத்தல், உணர்விழப்பு, நாவில் அதிக இனிப்பு, சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகமின்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், இருமல், மேல் மூச்சு, அதிக தூக்கம், தலைச்சுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகு

உடலின் அடிப்படை தத்துவங்கள்: பித்தம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. பித்தம்: உடலுக்கு வெப்பத்தைத் தருதல், உணவைச் செரித்தல், தோலுக்கு நிறத்தையும் பளபளப்பையும், பார்வை தருதல் போன்ற செயல்களபை் புரிகிறது. பித்தம் தன்னிலையிலிருந்து மாறி  நோய் நிலையை அடைந்தால் மலம், சிறுநீர், தோல் போன்றவை மஞ்சள் நிறமடைதல், அதிக பசி அல்லது பசியின்மை, உடல் கண் எரிச்சல், அதிக வியர்வை, தோல் சிவத்தல், நாவறட்சி, தாகம், புண்கள், கட்டிகள் தோன்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பித்த தேகிகளின் உடலமைப்பு: நீள்வட்ட தாடைகள் நன்றாக வளைந்து, தெளிவாகத் தெரியும்படியான தெளிவான முக அமைப்பு இருக்கும் செம்பு போன்ற மஞ்சள் நிறம் இருக்கும் தெளிவான நிலையான உடல

உடலின் அடிப்படை தத்துவங்கள்: வாதம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. வாதம்: இது உடலுக்கு ஊக்கம் உண்டாக்கல், மூச்சு விடல், மூச்சு வாங்கல், மனம், மொழி, மெய்களுக்கு செயல் தருதல், சிந்தனை செய்தல், உடல் தாதுக்களுக்கு அணிச்சைச் செயல் தருதல், தொழில் செய்யும் முனபை்பைத் தருதல், மலம், சிறுநீர், விந்து, நாதம், இவற்றை வெளியேற்றுதல், கண்களுக்கு ஒளி தருதல், கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்ற ஐம்பொறிகளுக்கு வன்மை தருதல் போன்ற செயல்களைப் புரிகிறது. வாதம் தன்னிலையிலிருந்து மாறி நோய் நிலையை அடைந்தால், உடலில் வலி, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், தசைவலி, தசை மெலிவு, மூட்டுவலி, மூட்டு நழுவல், தோல் வறட்சி, மலச்சிக்கல், நீர் சுருக்கு, வய

உடல் என்னும் இயந்திரம்

Image
இயற்கைக்கு மீறிய எச்செயலும் நோயை உண்டு பண்ணும் என்பது தெளிவு. இயற்கையோடு இயைந்ததே இந்த உடல். இதை தான் சித்தர்கள் அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்  என்று குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறு இந்த உலகமானது அண்டம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம், மண் என்னும் ஐம்பூதங்களால் ஆனது இந்த பூவுலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் இந்தப் பூவுடலிலும் ஏற்படுகின்றன. இதனால்தான் வேனிற்காலத்தில் அம்மை, மஞ்சள் காமாலை, கட்டிகள் போன்ற வெப்பம் காரணமான நோய்களும், குளிர்காலத்தில் இரைப்பு, இளைப்பு, பீனிசம் போன்ற குளிர்ச்சி சம்பந்தமான நோய்களும் உடலில் தோன்றுகின்றன. அதுமட்டுமல்லாமலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உண்டாகும் கதிர்வீச்சு மாற்றம் உடலிலும், மனதிலும் பல பேருக்கு பாதிப்பை உண்டாக்குவதை கண்கூடாகக் காணலாம். இயற்கை அளித்த இந்த உடம்புதான் எத்தகைய அற்புதமானது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் இயற்கையை படைத்த இறைவனால் எப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் அறிவியல் பூர்வமாக ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளனவே. அதுதான் மெய்ஞானத்தின்

இளமையோடு இருக்கச் செய்யும் சூப்

Image
பேபிகார்ன் சூப்: தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 200 கிராம் தக்காளி - 4 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் சோளமாவு - 4 டேபிள்ஸ்பூன் பால் - 300 மில்லி தண்ணீர் - 750 மில்லி மிளகுத் தூள் - சிறிதளவு சீரகத்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: நன்கு சுத்தம் செய்த பேபிகார்ன், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் காய்கறிகளை வேகும் வரை வதக்கி மசித்து வடிகட்டவும் பால் மற்றும்  சோளமாவு சேர்த்து வெள்ளைச்சாஸ் செய்யவும் இத்துடன் வடிகட்டிய காய்கறி கூழ் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும் குறிப்பு: பேபிகார்ன்க்கு பதில் காளான் / தக்காளி / பட்டாணி / கீரை / பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த பல வகையான சூப் தயாரிக்கலாம். பயன்கள்: சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. முதுமையினால் ஏற்படும் எலும்பு முறிந்து போவதை தவிர்க்கின்றன பேபிகார்னில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது இரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது சருமங்களை இளமையோடு இருக்க உதவ

இஞ்சியும் மெலனேஷியன் தீவும்

Image
இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள். இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம் விட

வாழைப்பழ பணியாரம் | Banana Paniyaram | Leela Tamil Kitchen

Image
Banana Paniyaram தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் - 1 சர்க்கரை -3 மேசைக்கரண்டி கோதுமை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/2 கப் சமையல் சோடா  - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை செய்முறை: முதலில் வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதில் கோதுமைமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பவுலில் அரைத்தவற்றை மிக்ஸியிலிருந்து எடுத்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு குழி பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி அளவிற்கு மாவை ஊற்றி  இருபுறமும் வேக விடவும். சூடான சுவையான வாழைப்பழ பனியாரம் ரெடி. **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

பன்னீர் பாயாசம் | paneer payasam | how to make paneer payasam in tamil | lees kitchen

Image
தேவையான பொருட்கள்: பால் - 2 கப் துருவிய பன்னீர் - 100கிராம் சர்க்கரை - 1/4 கப் முந்திரி பருப்பு - 5 - 8 கிஸ்மிஸ் பழம் - 5 -8 ஏலக்காய் தூள் அலங்கரிக்க பாதாம் பருப்பு - 8 செய்முறை: கடாயில் நெய் சேர்த்து முந்திரிபருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பால் கொதித்து சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும் இப்பொழுது துருவிய பன்னீரை சேர்த்து வேக விடவும். பன்னீர் வெந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பின் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து கிளறி இறக்கவும். பாதாம் பருப்பை தூவி குளிர வைத்து பருகவும். சுவையான பன்னீர் பாயாசம் தயார். SUBSCRIBE http://www.youtube.com/c/LeesKitchen இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் LEES KITCHEN சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : LEES KITCHEN : 8883543999 *

சுலபமாக வீட்டிலேயே செய்யக் கூடிய அல்வா

Image
தேவையான பொருட்கள்: ரவை - 1/2 கப் தண்ணீர் - 1 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் முந்திரிப்பருப்பு - 10 நெய் - 1/4 கப் கேரமல் செய்வதற்கு: சர்க்கரை - 1/4 கப் செய்முறை: முதலில் ரவையை இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஊற வைக்கவும் பின்னர் நன்கு ஊறிய ரவையை கையால் நன்கு கலந்து வெள்ளை துணியில் வடிகட்டி பாலை எடுத்துக் கொள்ளவும்.  வடிகட்டி வரும் பாலில் பாதி அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும் கடாயில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து கரைய விடவும். நன்றாக கரைந்து அடர் சிகப்பு நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை தான் அல்வாவிற்கு நிறத்தை தரும்.  மற்றொரு  கடாயில் நெய் சேர்த்து முந்திரிபருப்பை வறுத்துக் கொள்ளவும் அதன் பிறகு 1/2 கப் சர்க்கரை சேர்த்து கரைய விடவும். பின்னர் வடிகட்டிய பாலை சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.  இப்பொழுது கேரமல் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் நெய் சேர்த்து சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சூடான அல்வா ரெடி. SUBSCRIBE h

பன்னீர் சப்ஜி | Paneer Sabji | Paneer Gravy Masala Recipe | Lees Kitchen

Image
தேவையான பொருட்கள்: பன்னீர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் காஷ்மிரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 2 உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை: பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டிய பன்னீரை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின்னர் பொரித்த பன்னீரை சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பன்னீர்

மொறு மொறு பக்கோடா

Image
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி கடலை மாவு - 4 மேசைக்கரண்டி பூண்டு - 4 பல் பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - 1 கொத்து எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸிங் பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதில் சூடான  எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் தெளித்து  தெளித்து வெங்காய கலவையை பிசையவும். சூடான எண்ணெய்யில் வெங்காயத்தை பொறித்து எடுக்கவும். சுவையான வெங்காய பக்கோடா ரெடி. Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் அருமையான உணவு

Image
சிகப்பு அரிசி ராகி புட்டு தேவையான பொருட்கள்: சிகப்பு அரிசு மாவு - 1/2 கப் ராகி (அ) - 1/2 கப் கேப்பை துருவிய தேங்காய் - 1/4 கப் பொடித்த வெல்லம் - 1/4 கப் அல்லது 1/2 கப் நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - 1/2 டம்ளர் செய்முறை: முதலில் சிகப்பு அரிசி மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும் வெறும் கடாயில் சிகப்பு அரிசி மற்றும் ராகி மாவு கலவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவு கலவை ஆறியதும் அதில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவை பிசைந்த பின் கொழுக்கட்டை பிடித்தால் பிடிக்க வர வேண்டும், உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதுதான் மாவின் பதமாகும். இப்பொழுது சூடான இட்லி பாத்திரத்தில் புட்டு மாவை  வேக வைக்கவும். சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களில் புட்டு வெந்து விடும். அதன் பின்னர் புட்டில் துருவிய தேங்காய் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சுவையான சத்து நிறைந்த வாசனையான சிகப்பு அரிசி ராகி புட்டு தயார். பயன்கள்: சிகப்பு அரிசி சிவப்பு அரிசியில் 

உங்கள் குழந்தைகள் ஸ்ட்ராங்கா, ஷார்ப்பா வரனுமா !

Image
சத்துமாவு தேவையான பொருட்கள் கோதுமை - 1/2 கிலோ சாமை - 1/4 கிலோ திணை - 1/4 கிலோ குதிரைவாலி - 1/4 கிலோ கம்பு - 1/4 கிலோ சோளம் - 1/4 கிலோ மக்காச்சோளம் - 1/4 கிலோ ராகி (கேப்பை) - 1/4 கிலோ ஜவ்வரிசி - 1/4 கிலோ பார்லி அரிசி - 1/4 கிலோ கொள்ளு - 1/4 கிலோ கருப்பு உளுந்து 1/4 கிலோ சிவப்பு அரிசி - 1/4 கிலோ வரகு அரிசி - 1/4 கிலோ பாசி பயறு - 1/4 கிலோ கவுனி அரிசி - 1/4 கிலோ சுண்டல் - 1/4 கிலோ சுக்கு - 50 கிராம் ( தோல் நீக்கியது) ஏலக்காய் - 5 கிராம் முந்திரி - 100 கிராம் பாதாம் - 100 கிராம் செய்முறை 3 தேக்கரண்டி சத்துமாவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து அதனுடன் 1 டம்ளர் பால்சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி நாட்டுசர்க்கரை சேர்த்து  குடிக்கலாம்.  டீ மற்றும் காபி அருந்துவதற்கு மாற்றாக இதனை குடிக்கலாம். நல்ல ருசியாகவும் இருக்கும் அத்துடன் சக்தியும் கிடைக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் இதனை அருந்தலாம். இதனை வறுத்து அரைப்பதால் 6 மாதம் வரை கொடாமல் இருக்கும். காற்றுபுகாத டப்பாக்களில் வைத்து பயன்படுத்தவும்.  கஞ்ச

சத்தான சீரக சாதம் | Matar Jeera Rice | Cumin Rice | Jeera Matar Pulao Recipe in Tamil | lees kitchen

Image
தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி - 2 கப் பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை முதலில் கழுவி வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சிறிது வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான அதே சமயம் சத்தான பச்சை பட்டாணி சீரக சாதம் தயார். For More Interesting things Click the links Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

வைட்டமின் சி சத்து நிறைந்த பச்சடி

Image
மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள்: மாங்காய் - 2 பச்சை மிளகாய் - 4 வெல்லம் - 1/4 கப் தேங்காய் - 1/4 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் மாங்காயை கழுவி  தோல் நீக்கி  பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும், தேங்காயை துருவிக் கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து கொள்ளவும் பிறகு பச்சை மிளகாய் மற்றும் மாங்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லம், தேங்காய் சேர்த்து கலக்கவும்.  அட்டகாசமான மாங்காய் பச்சடி தயார். சாதம் மற்றும் தயிர் சாதம் சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். மாங்காயின் பயன்கள்: புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் சி சத்து மாங்காயில் இருப்பதால் அணுக்களின் உற்பத்திக்கு உதவி செய்கிறது இரத்த

இதயத்தை பாதுகாக்கும் பொடி

Image
வேர்க்கடலை பூண்டுப்பொடி தேவையானவை: வேர்க்கடலை - 1 கப் பூண்டு - 6 பல் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வெறும் கடாயில் வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். பூண்டு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்து 15 நாள்கள் வரை பயன்படுத்திகொள்ளவும். பயன்கள் : இருதயத்தை பாதுகாப்பதோடு இதய நோய் வராமலும் இரத்த ஒட்டத்தையும் சீராக்கவும் செய்கிறது. உடல் எடையை குறைய விரும்புவர்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கல் உருவாவதை தடுக்கிறது ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது மன அழுத்தத்தைப் போக்குகிறது முளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பெண்களுக்கு மார்பக் கட்டி வராமல் தடுத்து ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது பெண்களுக்கு எலும்புத் துளை

என்ன சமையல் செய்வது என்று யோசனையா?

Image
ஊட்டச்சத்து மிகுந்த உணவு பட்டியல் திங்கட்கிழமை: அதிகாலை நேரம்: பால் காலை உணவு: இட்லி / மினி இட்லி/ வெஜ் இட்லி சாம்பார்/ கறிவேப்பிலை சட்னி முற்பகல்: கீரை சூப்/ வெஜ் சூப்/ பருப்பு சூப் மதிய உணவு: வெஜ் புலாவ்/ உருளைக்கிழங்கு மசால் / தயிர் பச்சடி மாலை நேரம்: கார்ன்ப்ளேக்ஸ்/ ரஸ்க், பால்/ கொய்யாப்பழம்/ பப்பாளித் துண்டுகள் இரவு உணவு: வெஜ்ரவா கிச்சடி, தக்காளி சட்னி / பருப்பு சட்னி இரவு நேரம்: பால் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரம்: பால் காலை உணவு: சப்பாத்தி/ கீரை சப்பாத்தி / கேரட் சப்பாத்தி/ வெஜ் கிரேவி முற்பகல்: லெமன் ஜூஸ்/ சாத்துக்குடி ஜூஸ்/ பேரீச்சம் பழம் 3/4 துண்டுகள் மதிய உணவு: பருப்பு சாதம், தயிர் சாதம், கேரட், பீன்ஸ் பொரியல்/ அவரைக்காய் பொரியல் மாலை நேரம்: பால், பாசிப்பயறு/கொண்டைக்கடலை, கடலை, சுண்டல்/வேக வைத்த நிலக்கடலை இரவு உணவு: ஊத்தப்பம்/ வெங்காய ஊத்தப்பம்/ வெஜ் ஊத்தப்பம் மல்லி சட்னி இரவு நேரம்: பால் புதன் கிழமை அதிகாலை நேரம்: பால் காலை உணவு: இடியாப்பம்/தக்காளி இடியாப்பம்/வெஜ் இடியாப்பம், தேங்காய் பால், தேங்காய் சட்னி முற்பகல்: கேரட் / வெள்ளரிக்காய் துண்டுக

எக் சில்லி ஃப்ரை

Image
தேவையானவை: வேக வைத்த முட்டை - 4 கார்ன்ஃப்ளார் - 3 டீஸ்பூன் மைதா - 3 டீஸ்பூன் கஸ்தூரிமேத்தி - அரை டீஸ்பூன் மிளகாய்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூண்டு - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது குடை மிளகாய் - 2 டீஸ்பூன் சதுரங்களாக நறுக்கியது வெங்காயம் - 3 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது மிளகாய்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முட்டையை வேக வைத்து தோல் நீக்கி நான்காக நறுக்கவும். கார்ன்ஃப்ளார் மைதா கஸ்தூரிமேத்தி மிளகாய்தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெயைக் காய வைத்து முட்டையை அந்த மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் குடைமிளகாய் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.  இப்போது பொரித்து வைத்த முட்டை துண்டுகளையும் சேர்த்த

ஹோம் மேட் ப்ளாக் பராஸ்ட் கேக் || Home Made Black Forest Cake

Image
தேவையான பொருட்கள்: மைதா - 1/2 கப் ( - 2 டேபிள் ஸ்பூன்) கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் முட்டை - 2 உப்பு - 1/8 டீஸ்பூன் பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 1/2 கப் வென்னிலா எசன்ஸ - 1/2  டீஸ்பூன் ரீபைன்ட் ஆயில் - 1/4 கப் அலங்கரிக்க: விப்பிங் கீரிம் - 3/4 கப் டார்க் சாக்லேட் செர்ரி ஓவன் என்றால் முதலில் 180 டிகிரி செல்சியஸ் 10 நிமிடம் ப்ரி ஹீட் செய்ய வேண்டும் கேஸ் ஸ்டவ் என்றால் அடிகனமான பாத்திரத்தில் உப்பை பரப்பி அதன் மீது ஒரு ஓட்டை போட்ட தட்டு வைத்து 20 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்த வேண்டும். விப்பீங் கீரிம் செய்முறை: விப்பீங் கீரிம் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடிக்க வேண்டும். விப்பீங் கீரிம்மை பீட் செய்யும் பவுலை நன்கு ப்ரிசரீல் வைத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை யென்றால் பீட் செய்யும் போது கீரிம் உருகிவிடும். கேக் செய்முறை: ( முதலில் அரை கப் மைதாவில் 2 டேபிள் ஸ்பூன் மைதாவை எடுத்து விட்டு அதே அளவிற்கு அதாவது  2 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் சேர்த்துக்

தக்காளி மசாலா பூரி

தக்காளி மசாலா பூரி | How to make Tomato Masala Puri | Lees Kitchen தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 2 கப் ரவை - 1/2 கப் தக்காளி - 4 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம்மசாலா, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பூரிகளாக திரட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். சுவையான தக்காளி பூரி தேங்காய் சட்டினியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். Blog: https://leelatamilkitchen.blogspot.com/ Facebook : https://www.facebook.com/merlin.leela Instagram : https://www.instagram.com/merlin.leela/ **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.c

சர்க்கரை வியாதிக்கு சூப்பர் மருந்து

Image
கோவக்காய் மசாலா புளிக்குழம்பு தேவையான பொருட்கள்: கோவக்காய் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 10 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் புளி - எலுமிச்சையளவு உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க: நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி வத்தல் - 2 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து வறுத்து அரைக்க: வத்தல் - 2 மல்லி - 1 மேசைக்கரண்டி அரிசி - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு  - 1/2 தேக்கரண்டி துருவிய தேங்காய் - 1 கப் பொட்டுக்கடலை - 1/2 மேசைக்கரண்டி செய்முறை: கோவக்காயை நன்கு கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சோ்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மற்றொரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கோவக்காயை தனியாக வதக்கி அதனுடன் சேர்க்கவும்.

சத்தான பாசிப்பயறு கிச்சடி | Healthy Moong dal Recipe | Delicious Gujarati Khichdi Kadhi

Image
சத்தான பாசிப்பயறு கிச்சடி தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் பயத்தம்பருப்பு - 3/4 கப் பெரிய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 தாளிக்க நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 செய்முறை கடாயில் பாசி பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியதும் கழுவிய பச்சரிசி சேர்க்கவும். அதன் பின்னர் வறுத்து கழுவிய பாசி பருப்பை சேர்த்து நன்கு குழைய வேக விடவும். இப்பொழுது சுவையான சத்துநிறைந்த பாசிப்பயறு கிச்சடி தயார். குழந்தைகளுக்கு ஏற்றது. Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

EGG WHITE CURRY

Image
தேவையான பொருட்கள்: வேக வைத்த முட்டை - 4 பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு - 10 -15 தாளிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 2 துண்டு கிராம்பு - 3 ஏலக்காய் - 2 செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து அங்காங்கே கீறிக் கொள்ளவும். தேங்காய் மற்றும் தோலுரித்து பாதாம் பருப்பை நன்கு விழுதாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இப்பொழுது தேங்காய் மற்றும் பாதாம் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி முட்டைகளை சேர்க்கவும். மிகவும் சுவையா எக் மசாலா கிரேவி தயார். Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen